Posts

Showing posts from June, 2025

பவானி

Image
  மாரிமைந்தன் சிவராமன் ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும் 👈 பாடல் பெற்ற தலங்கள்-3 பவானி கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் ஏழு உள்ளன. இவை ' கொங்கேழு தலங்கள் ' என்று அழைக்கப்படுகின்றன. கொங்கேழு தலங்களில் மூன்றாவதாக அமையப் பெற்ற திருத்தலம் பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில் . நாககிரி, வேதகிரி, மங்களகிரி,  சங்ககிரி ஆகிய நான்கு மலைகளுக்கு இடையே அமைந்துள்ள பழமையான பெரிய கோயில்  கொண்ட நகரமே பவானி. பிறப்பு முதல் இறப்பு வரையிலான சகல தோஷங்களுக்கும் வருடத்தில் எல்லா நாட்களும் பக்தர்கள் பரிகாரம் காணும் பெருமை கொண்டது  பவானியில் இருக்கும் திருக்கோயில். வாருங்கள், நாமும் வலம் வருவோம். இம்மையும் மறுமையும் நலம் பெறுவோம். தலபுராணம் அழகாபுரி என்னும் சிவ நகரை ஆண்டு வந்த செல்வத்திற்கு அதிபதியான குபேரன் சிவ தலங்களுக்குச் சென்று வழிபடும் வழக்கம் கொண்டவன். ஒருமுறை தன் புட்பக விமானத்தில் செல்லும்போது காவிரி, பவானி நதிக்கரையில் பசுமை நிறைந்த  சோலைகளைக் கண்டான். அவற்றின் நடுவே தெய்வீகமான ஒரு மரத்தையும் கண்ணுற்று வியந்தான். அச்சோலைகளில் மானும் புலியும், பசுவும் யான...

திருமுருகன் பூண்டி

Image
  பாடல் பெற்ற தலங்கள்-2 திருமுருகன் பூண்டி ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும் 👈 கொங்கு ஏழு தலங்கள் என்பது கொங்கு மண்டலத்தில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற ஏழு சிவாலயங்களைக் குறிக்கும். கொங்கு ஏழு தலங்களில் இரண்டாவதாக வணங்கப்படும் திருக்கோயில் திருமுருகன் பூண்டி முருகநாதர் ஆலயம். இத்திருக்கோயில் தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாகப் பராமரிக்கப்பட்டு வரும் தொன்மைச் சிறப்பு கொண்டது. வாருங்கள் தரிசிப்போம்! இறையருள் பெறுவோம்! புராணச் சிறப்பு கடும் தவம் புரிந்து சாதுரியமாக  இறைவனிடம் சாகா வரம் பெற்ற அசுரன் சூரபத்மனைப்  போரில்  வென்று  சூரசம்ஹாரம் செய்ததால் முருகப்பெருமானுக்குப் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. கடுமையானது எனக் கருதப்படும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற  முருகப்பெருமான் சூரசம்ஹாரம் நிகழ்த்திய திருச்செந்தூரிலிருந்து நேராக  இத்திருக்கோயிலுக்கு வந்து சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகப் புராணம் கூறுகிறது. முருகன் சிவபெருமானை வழிபாடு செய்த திருத்தலம் என்பதால்  இக்கோயிலில் உறைந்து அருள் பாலிக்கும் சிவபிரான் முருக நாதேஸ்வரர் , முருகநாத சு...