Posts

திருமுருகன் பூண்டி

Image
  பாடல் பெற்ற தலங்கள்-2 திருமுருகன் பூண்டி ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும் 👈 கொங்கு ஏழு தலங்கள் என்பது கொங்கு மண்டலத்தில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற ஏழு சிவாலயங்களைக் குறிக்கும். கொங்கு ஏழு தலங்களில் இரண்டாவதாக வணங்கப்படும் திருக்கோயில் திருமுருகன் பூண்டி முருகநாதர் ஆலயம். இத்திருக்கோயில் தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாகப் பராமரிக்கப்பட்டு வரும் தொன்மைச் சிறப்பு கொண்டது. வாருங்கள் தரிசிப்போம்! இறையருள் பெறுவோம்! புராணச் சிறப்பு கடும் தவம் புரிந்து சாதுரியமாக  இறைவனிடம் சாகா வரம் பெற்ற அசுரன் சூரபத்மனைப்  போரில்  வென்று  சூரசம்ஹாரம் செய்ததால் முருகப்பெருமானுக்குப் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. கடுமையானது எனக் கருதப்படும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற  முருகப்பெருமான் சூரசம்ஹாரம் நிகழ்த்திய திருச்செந்தூரிலிருந்து நேராக  இத்திருக்கோயிலுக்கு வந்து சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகப் புராணம் கூறுகிறது. முருகன் சிவபெருமானை வழிபாடு செய்த திருத்தலம் என்பதால்  இக்கோயிலில் உறைந்து அருள் பாலிக்கும் சிவபிரான் முருக நாதேஸ்வரர் , முருகநாத சு...

அவிநாசி

Image
மாரிமைந்தன் சிவராமன்    பாடல் பெற்ற தலங்கள்-1 அவிநாசி திருப்புக்கொளியூர் சமயக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் சிவபெருமானின் தொண்டர் மட்டுமல்ல, நாயனாரும் கூட. இறையனார் சிவபிரானின் பிரியமான தோழர் எனும் பாக்கியம் பெற்றவர். சிவாலயங்கள் தோறும் சென்று அங்கு வீற்றிருக்கும் அம்மையப்பனை வணங்கி அழகுத் தமிழில் அமுதப் பாடல்கள் பாடுவது அவரது சிவத்தொண்டு. ஒருமுறை சுந்தரர் கொங்கு நாட்டில் பயணம் செய்தார். அதுபோது 'திருப்புக்கொளியூர்' என்ற ஊரில் உள்ள சிவாலயம் செல்ல விழைந்தார். கோயிலுக்கு அந்தணர்கள் வாழும் அக்ரகாரம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு வீடு அமர்க்களமாக இருந்தது. இன்னிசை முழங்க வீடு களை கட்டியிருந்தது. வீட்டிற்கு வெளியே ஆட்டமும் பாட்டமும் அதிகம் இருந்தது. அதேசமயம் எதிர் வீடு சோகமயமாய்க் காணப்பட்டது. அடிக்கடி விசும்பலும் கதறலும் வெளியே வீதியில் சென்று கொண்டிருந்த சுந்தரருக்குக் கேட்டது. இந்த வித்தியாசச் சூழல் சுந்தரருக்கு புதிது. எனவே விசாரித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு அத்தெருச் சிறுவர்கள் ஏரிப் பக்கம் விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது திடீரெனக் கரைக்கு வந்த...