திருமுருகன் பூண்டி

பாடல் பெற்ற தலங்கள்-2 திருமுருகன் பூண்டி ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும் 👈 கொங்கு ஏழு தலங்கள் என்பது கொங்கு மண்டலத்தில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற ஏழு சிவாலயங்களைக் குறிக்கும். கொங்கு ஏழு தலங்களில் இரண்டாவதாக வணங்கப்படும் திருக்கோயில் திருமுருகன் பூண்டி முருகநாதர் ஆலயம். இத்திருக்கோயில் தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாகப் பராமரிக்கப்பட்டு வரும் தொன்மைச் சிறப்பு கொண்டது. வாருங்கள் தரிசிப்போம்! இறையருள் பெறுவோம்! புராணச் சிறப்பு கடும் தவம் புரிந்து சாதுரியமாக இறைவனிடம் சாகா வரம் பெற்ற அசுரன் சூரபத்மனைப் போரில் வென்று சூரசம்ஹாரம் செய்ததால் முருகப்பெருமானுக்குப் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. கடுமையானது எனக் கருதப்படும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற முருகப்பெருமான் சூரசம்ஹாரம் நிகழ்த்திய திருச்செந்தூரிலிருந்து நேராக இத்திருக்கோயிலுக்கு வந்து சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகப் புராணம் கூறுகிறது. முருகன் சிவபெருமானை வழிபாடு செய்த திருத்தலம் என்பதால் இக்கோயிலில் உறைந்து அருள் பாலிக்கும் சிவபிரான் முருக நாதேஸ்வரர் , முருகநாத சு...