Posts

கொடுமுடி

Image
  மாரிமைந்தன் சிவராமன் ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும் 👈 பாடல் பெற்ற தலங்கள்-5 கொடுமுடி தற்போது கொடுமுடி என்று அழைக்கப்படும் திருப்பாண்டிக் கொடுமுடி பாடல் பெற்ற தலங்களில் முக்கியமானது. கொங்கு ஏழு சிவதலங்களில்  புகழ் பெற்ற ஒன்று. சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும் தெய்வங்களும் ஒரே கோயிலில் குடி கொண்டிருக்கிற தலம். அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்ற மூன்று முத்தான நாயன்மார்களால் பாமாலைகள் சூட்டப்பட்ட திருத்தலம். மூன்று கோபுரங்கள், மூன்று வாயில்கள், மும்மூர்த்திகள், மூன்று  கோயில்கள், மூவர் பாடிய தலம் என்பதால் இங்கு பிரார்த்தனை செய்பவர்கள் மும்மடங்கு பலன் பெறுவார்கள் என்பது நிச்சயம். கொங்கு நாட்டில் உள்ள பரிகாரத் தலங்களில் முக்கியமானது கொடுமுடி. தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் 213 - ஆவது சிவதலமாக விளங்கும் கொடுமுடிக்குச் சென்று வருவோம். வாருங்கள். திருப்பாண்டிக் கொடுமுடி இத்தலம் கொடுமுடி, திருப்பாண்டிக் கொடுமுடி, பிரம்மபுரி,  ஹரிஹரபுரம், அமுதபுரி, கன்மாடபுரம், கறையூர், கரைசை, அங்கவர்த்தனபுரம், பாண்டு நகரம், பரத்துவாச சேத்திரம், தென் கைலாசம் முதலான பெயர்க...

வெஞ்சமாக்கூடல்

Image
மாரிமைந்தன் சிவராமன் ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும் 👈 பாடல் பெற்ற தலங்கள்-4 வெஞ்சமாக்கூடல் தேவாரப் பாடல் பெற்ற 'கொங்கு ஏழு' சிவ தலங்களில் ஒன்று ' வெஞ்சமாக்கூடல் ' எனும் ' வெஞ்சமாங்கூடலூர் '.  தேவர்களின் தலைவன் இந்திரனும், சமயக்குரவர் நால்வரில் அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தரும், பெரிய புராணம் அருளிய தெய்வச் சேக்கிழாரும், திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரும், இராமலிங்க அடிகளும், திருப்பதி சுவாமிகளும், திருமுருக கிருபானந்த வாரியாரும் வழிபட்ட திருத்தலம்   வெஞ்சமாங்கூடலூர். இறையருளும் ஆன்மிக எழில் அமைப்பும் நிரம்பப் பெற்றிருக்கிற வெஞ்சமாங்கூடலூர் திருத்தலத்திற்கு  வாழ்க்கையில் ஒருமுறையேனும்  சென்று வழிபடுதல் மானிடப் பிறவியின் இறைக் கடமைகளில் தலையானது. வாருங்கள், இறைவன் கல்யாண விகிர்தீஸ்வரரையும், இறைவி பண்ணேர் மொழியம்மையையும்  வணங்கிப் பிறவிப் பயனடைவோம். கொங்கு நாடு கொங்கு என்பதற்குத் தேன் என்று பொருள். தேன் கிடைத்த நாடு என்பதால் கொங்கு நாடு எனப் பெயர் கொண்டது. தமிழர்களின் தங்க காலமான சங்க காலத்திலேயே கொங்கு நாடு தனி நாடாகச் சிறப்புப் பெற்றிருந்தது. அக்காலக் ...

பவானி

Image
  மாரிமைந்தன் சிவராமன் ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும் 👈 பாடல் பெற்ற தலங்கள்-3 பவானி கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் ஏழு உள்ளன. இவை ' கொங்கேழு தலங்கள் ' என்று அழைக்கப்படுகின்றன. கொங்கேழு தலங்களில் மூன்றாவதாக அமையப் பெற்ற திருத்தலம் பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில் . நாககிரி, வேதகிரி, மங்களகிரி,  சங்ககிரி ஆகிய நான்கு மலைகளுக்கு இடையே அமைந்துள்ள பழமையான பெரிய கோயில்  கொண்ட நகரமே பவானி. பிறப்பு முதல் இறப்பு வரையிலான சகல தோஷங்களுக்கும் வருடத்தில் எல்லா நாட்களும் பக்தர்கள் பரிகாரம் காணும் பெருமை கொண்டது  பவானியில் இருக்கும் திருக்கோயில். வாருங்கள், நாமும் வலம் வருவோம். இம்மையும் மறுமையும் நலம் பெறுவோம். தலபுராணம் அழகாபுரி என்னும் சிவ நகரை ஆண்டு வந்த செல்வத்திற்கு அதிபதியான குபேரன் சிவ தலங்களுக்குச் சென்று வழிபடும் வழக்கம் கொண்டவன். ஒருமுறை தன் புட்பக விமானத்தில் செல்லும்போது காவிரி, பவானி நதிக்கரையில் பசுமை நிறைந்த  சோலைகளைக் கண்டான். அவற்றின் நடுவே தெய்வீகமான ஒரு மரத்தையும் கண்ணுற்று வியந்தான். அச்சோலைகளில் மானும் புலியும், பசுவும் யான...